துளிர்மனம் அறக்கட்டளையின் முக்கிய நோக்கமே துளிர்மனம் பப்ளிக் மேல்நிலைப்பள்ளி-யை தொடங்கி உலகத்தரத்துடன் கூடிய கல்வியை கிராமப்புற ஏழையெளிய கல்வியில் பின் தங்கிய பிள்ளைகளுக்கு முற்றிலும் (100%) இலவசக் கல்வியை வழங்கி அவர்களை நம்முடைய சமுதாயத்தில் அர்த்தமுள்ள வாழ்வியலை, ஆனந்தமாக வாழ்வதற்கு எங்களின் பயணமும், அர்ப்பணிப்பும் உங்களோடு என்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம்.
இன்றைய காலக்கட்டத்தில் முறையான கல்வி, தெளிவான சிந்தனை மட்டும்தான் நம்மையும், நம்முடைய நாளைய தலைமுறையை அசைக்கி பார்க்க முடியாத அளவுக்கு கட்டமைத்துக் கொள்ளமுடியும். நம்முடைய கல்வி ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுழலாமல், கல்வி வானலாவியதும், மிக ஆழமானதும், நுட்பமானதும், புனிதமானதும் என்பதை அறிந்துகொள்ள நாங்கள் உங்களின் இதயங்களில் நம்பிக்கையாக இணைந்து செயல்படுகிறோம்.
துளிர்மனம் அறக்கட்டளையின் முக்கிய நோக்கமே கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வியலை புரிதலோடு மாற்றத்திற்கும், முன்னேற்றத்திற்கும் வழிகாட்டுதலே ஆகும். கல்வி என்பது வேலை வாய்ப்புக்கு மட்டுமல்ல. தனி மனித ஒழுக்கத்திற்கும், தனி மனித சிந்தனைக்கும், தனி மனித மாற்றத்திற்கும், தனி மனித முன்னேற்றத்திற்கும் ஆகும்.
9597123407, 7373684987
04142-214626
77A VAIJAYANTHIMALA
COMPLEX,
THIRUPATHIRIPULIYUR,
CUDDALORE,
TAMILNADU,INDIA-607002